Real Click Studio

Real Click Studio We are Real Click Studio Seelan. A Photography With Seelan from Switzerland.

Real Click Studios
Dein Foto bietet Hochzeit Fotografie, Schul Fotografie, Bewerbungsbilder, Passfotos, Fotoshooting für Einzel-Portraits, Paare, Baby Bauch Fotos, Baby Fotos, Kinder- & Teenager Fotos, sowie Mitarbeiter-Fotos für Business, Event Fotografie sowie weitere Dienstleistungen auf
Anfrage an. Buchen Sie Ihr Fotoshooting in Raum Zürich oder ganzen Schweiz, verschenken Sie einen Fotoshoot

ing Gutschein, oder reservieren Sie Ihren Hochzeitsfotografie Termin für Ihre Hochzeit in Zürich, oder ganzen Schweiz...

Fotoabzüge & Geschenkshop
Passfoto & Ausweisbilder
Bewerbungsfoto
Businessbilder
Facebook Profilfotos
Studio & Outdoorshooting
Hochzeitsfotografie
Schulfotografie
Lifestyle Sedcardshooting
Babybauch Shooting
Newborn & Baby Shooting
Digitalisieren
Fotos Restaurieren...

10 ஆம் ஆண்டு நினைவலைகள்.அப்பா.ஆண்டுகள் பத்தாகியும்எங்களால் ஆறமுடியவில்லைஉங்கள் பிரிவால் வடியும் கண்ணீரும் காயவில்லை. பாச...
21/04/2026

10 ஆம் ஆண்டு நினைவலைகள்.

அப்பா.
ஆண்டுகள் பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை.

பாசமழை பொலிந்து.
நேசமாய் எனை வளர்த்து.
துனிவுடனே நான் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எனை விட்டு சென்றதெங்கே?

காலங்கள் கடந்து போகும்.
ஆனால் உங்கள் நினைவுகள்
மட்டும் காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும்.
எம் கண்ணிறைந்த
கண்ணீரோடு அப்பா.

இன்றுடன் பத்தாண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றென்றும்
எனை விட்டகலாது.

உங்கள் ஆத்மா இறையடியில் சாந்தியடைய எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன்…

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி..
ஓம் சாந்தி…

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.இனிய இந்த புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கைமகிழ்ச்சிஆரோக்கியம்செழிப்பு மற்றும் சமாதா...
13/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.
இனிய இந்த புதிய ஆண்டில்
உங்கள் வாழ்க்கை
மகிழ்ச்சி
ஆரோக்கியம்
செழிப்பு மற்றும் சமாதானத்தால் நிரம்பியதாக இருக்கட்டும்.
புதிய தொடக்கங்கள்.
புதிய நம்பிக்கைகள்.
புதிய வெற்றிகள் உங்கள்
வாழ்வில் மலரட்டும்.
இந்த தமிழ் புத்தாண்டு
எல்லோருக்கும் ஒற்றுமை
அன்பு மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…

ஆலமும் உண்டாய்.அனலாய் நின்றாய்.அடியவர் துயர் தீர்க்க வந்தாய்.மஹா சிவராத்திரி நன்னாளில்சிவனருள் பெருகிட வாழ்த்துக்கள்.நமச...
15/02/2026

ஆலமும் உண்டாய்.
அனலாய் நின்றாய்.
அடியவர் துயர் தீர்க்க வந்தாய்.

மஹா சிவராத்திரி நன்னாளில்
சிவனருள் பெருகிட வாழ்த்துக்கள்.

நமச்சிவாய வாழ்க.
நாதன் தாள் வாழ்க.
இருள் நீக்கி ஒளிதரும்
ஈசனின் சிவராத்திரி திருநாளில்
வாழ்வில் வளம் பெருகிட வாழ்த்துக்கள்.

கண்விழித்து
இறைவனைத்தொழுவோம்.
இந்த மங்களகரமான சிவராத்திரி நாளில்.

உங்கள் வாழ்க்கையில் இருந்து
அனைத்து தடைகளையும் நீக்கட்டும்.
ஹர் ஹர் மகாதேவ்.

சிவபெருமான் உங்களுக்கு வலிமை
ஞானம் மற்றும் உள் அமைதியை
வழங்கட்டும்.

கவலைகள் மறந்து மகிழ்வோம்.
இனிய
மஹா சிவராத்திரி நல் வாழ்த்துக்கள்…

இனிய
மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்…

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…
08/12/2025

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…

உலகில் வருடந்தோறும் அதிக அளவிலான மக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புண்ணிய தலங்களில் மெக்காவிற்கு அடுத்த இடத்தில் நம் ...
19/11/2025

உலகில் வருடந்தோறும் அதிக
அளவிலான மக்கள் புனிதப் பயணம்
மேற்கொள்ளும் புண்ணிய தலங்களில் மெக்காவிற்கு அடுத்த இடத்தில் நம் சபரிமலை உள்ளது.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..

இன்னும் சில நாட்கள். நாம் அனைவரும் ஐயன் பாதம் தொட.ஓம் சுவாமியே சரனம் ஐயப்பா…
03/11/2025

இன்னும் சில நாட்கள்.
நாம் அனைவரும் ஐயன் பாதம் தொட.
ஓம் சுவாமியே சரனம் ஐயப்பா…

என்றென்றும் என் உயிரில் கலந்த என் அம்மாவின் 7 ஆம் ஆண்டுநினைவலைகள்…20.10.2025ஓம் சாந்தி.
19/10/2025

என்றென்றும் என் உயிரில் கலந்த என் அம்மாவின் 7 ஆம் ஆண்டு
நினைவலைகள்…
20.10.2025
ஓம் சாந்தி.

என்றென்றும் என் உயிரில் கலந்த என் அப்பாவின் 9 ஆம் ஆண்டுநினைவலைகள்…20.10.2025ஓம் சாந்தி.
19/10/2025

என்றென்றும் என் உயிரில் கலந்த என் அப்பாவின் 9 ஆம் ஆண்டு
நினைவலைகள்…
20.10.2025
ஓம் சாந்தி.

பேரழகி  அவள்.     கருவிழி அழகு.கன்ன குழி அழகு.கார் கூந்தல் கவிபாடும்.அலை முடி அழகு.மயில் தோகை விழி இமைவித விதமாய் அழகு.ப...
11/06/2025

பேரழகி அவள்.

கருவிழி அழகு.
கன்ன குழி அழகு.

கார் கூந்தல் கவிபாடும்.
அலை முடி அழகு.

மயில் தோகை விழி இமை
வித விதமாய் அழகு.

பவள மலை பளிங்கு சிலை.
மென் நாசி அழகு.

கோவை பழ இனிப்பு கடல்
செந்நிற இதழ் சுவை அழகு.

மென் தேகம் மெலிய
தழுவிய சேலையோ பேரழகு.

வைர கீரடம் நீண்டு
மருவிய தங்க விரல்கள் அழகு.

மெல்லிடை மௌனம்
கொள்ளும் சிற்றிடை அழகு.

மலர் கொடியில் மா கனிகள்
மலிந்த விதம் அழகு.

பூ பாதம் பூமி தொட்டு
நடை பயில பூலோமே அழகு.

சிற்றிடையாள்
செம்பவள தங்க சிலையாள்.

என்னை
கவிஞானக்கிய பேரழகியவள் அழகு.

அன்பில் சிறந்தாள்.
கொஞ்சம் ஆணவம்
மிகுந்த சிவந்த
அவள் அதரமிது அழகு.

சொல்ல சொல்ல தீராது.
சுவைக்க சுவைக்க போதாது.

அவள் முத்தங்கள்
பாற்கடல் அமுதங்களை விட அழகு.

அன்பிலும் அடைகடல்
அழகிலும் ராட்சஷியாள்.

என் அழகி…

தாய்ப்பாசத்திற்கு நிகர் எதுவுமில்லை...தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட...
22/05/2025

தாய்ப்பாசத்திற்கு
நிகர் எதுவுமில்லை...

தனது வாழ்க்கையின் உச்சகட்ட
உயர்விற்கு சென்று விட்ட ஒருவன்
தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா.
என்னைப் பெற்றெடுத்து
பாசத்தைக் கொட்டி
பல தியாகங்களை செய்து
காலமெல்லாம் என் மீது பாசத்தை
பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும்
நான் என்ன செய்ய வேண்டும்
என்றான் மகன்.
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன என்னுடைய கடமையைத் தானே செய்தேன். அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும் எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்.

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய் மகனிடம்
சரி நீ தொடர்ந்து கேட்பதால் ஒன்று சொல்கிறேன்.
அதை நிறைவேற்றினால்
போதும் என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.
அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றான் மகன்.
ஒன்றுமில்லை மக்னே
நீ குழந்தையாக இருந்த
போது எனது அருகில் படுத்து உறங்கினாயே அதைப் போல இன்று ஒரு நாளைக்கு
என்னுடன் படுத்து உறங்கு
எனக் கூறினாள் தாய்.

அம்மா.
நீ கேட்பது வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு தனது தாயின் படுக்கையில் தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய் எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன் தூக்கத்திலேயே படுக்கையின்
மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும் இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன் தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.
சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன் தூக்கம் கலையவே எழுந்து பார்க்கும் போது தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து கோபமாக

என்ன அம்மா செய்கிறாய்
தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய் ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்.
மகனே.
அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.
நீ குழந்தையாக இருக்கும் போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால் உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.
இது உன்னால் முடியுமென்றால் தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் என்றாள் தாய்.

நண்பர்களே.
உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும் ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய
அரவணைப்பு.
அன்பு.
காலநேரம் பாராது
தனது மகனை சீராட்டி.
உணவூட்டி. வளர்த்து.
தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும். நீ அவளுடைய சதையும் ரத்தமுமாகும் தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள் ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவு தான் வயதானாலும் தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்த போது இறைவனைக் காணத்தான் இறைவன் தாயைப் படைத்தான்.

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்...

பெண்மை…ஒரு பெண்ணின் இடை தான் உனக்கு ஆபாசத்தைத் தரும் என்றால்நீ பிரசவ அறையில் இருந்து பார்.ஒரு பெண்ணின் மார்பு தான் உனக்க...
21/05/2025

பெண்மை…

ஒரு பெண்ணின் இடை தான்
உனக்கு ஆபாசத்தைத் தரும் என்றால்
நீ பிரசவ அறையில் இருந்து பார்.

ஒரு பெண்ணின் மார்பு தான் உனக்கு ஆபாசத்தைத் தரும் என்றால்
அவள் குழந்தை பெற்று அவள் மார்பில் பால் கட்டி இருக்கும் போது அவள் படும் வேதனையைப் பார்.

ஒரு பெண்ணின் வயிறு தான் உனக்கு ஆபாசத்தைத் தரும் என்றால்
அவள் மாதத்தில் மூன்று நாள் வயிற்று வலியால் துடித் துடிக்கும் போது பார்.
அவள் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த தையலைப் பார்.

ஒரு பெண்ணின் இடுப்பைப் பார்த்து நீ ரசிக்கிறாய் உன் தாய் உன்னை இடுப்பில் தூக்கிச் சுமந்ததை நினைத்துப் பார்.

ஒரு பெண்ணின் பின்புறத்தைப் பார்த்து நீ ரசிக்கிறாய் என்றால் உனக்கு ஒரு முள்ளுக் குத்தினாலே அய்யோ
அம்மா என்று கத்துகிறாய் அவள் முதுகுத்தண்டில் ஊசி குத்திய பிறகு தான் அவளுக்கு பின்புறத்தில்
சதை வளர்கிறது.

உனக்கு ஆண் என்ற அங்கீகாரத்தைக் கொடுப்பதே ஒரு பெண் தான்.

பெண்களைப் பெண்களாக பார்க்க வேண்டாம் ஆனால் காமத்தைத் தரும் போதைப் பொருளாக மட்டும் பெண்களைப் பார்க்காதீர்கள்.

நல்ல பெண்மையைப் போற்றுவோம்.
நல்ல தாய்மையைப் போற்றுவோம்…

Adresse

Embrach
8424

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Real Click Studio erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Real Click Studio senden:

Teilen