20/05/2026
"பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது".
📶செய்தி:
நேற்றைய தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி பேசியது:
"தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னப் பத்தி சோஷியல் மீடியால அரசியல் உலகத்தில சில விமர்சனங்கள் பரவிட்டு இருக்கு. அதுக்கு நான் விடை குடுக்கலேன்னா அது உண்மைன்னு ஆயிடும்".
"ஃபர்ஸ்ட் வந்து தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் வந்து ஸ்டாலின் சாரை நான் போய் பாத்தது. அதுக்கு கொஞ்சம் விமர்சனங்கள் வந்தது".
"ஸ்டாலின் சார் என்னோட நண்பர். 38, 40 ஆண்டு கால நண்பர். எங்கள் நட்பு கொள்கைகள் அரசியலுக்கு எல்லாம் அப்பாற் பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். அப்படி இருந்த போதிலும் எனக்கு ஸ்டாலின் சார் அவரது தொகுதியில் தோத்தது மிகவும் கஷ்டமாக இருந்தது அதனால் ஒரு நண்பன் என்ற முறையில் தான் நான் அவரை போய் சந்தித்தேன்".
✅எனது பார்வை:
ரஜினி நேற்று அளித்த பேட்டி ஒரு அப்பட்டமான வாக்கு மூலம் என்றுதான் நான் கருதுகிறேன். ஆமாம் இதுவரை யூகங்களின் அடிப்படையில் நான் எனது முந்தைய பல பதிவுகளில் எழுதிய கருத்துக்கள் பல இப்போது நிஜம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த நிழல் மனிதரின் நிஜ மனோபாவம் எப்படி எல்லாம் இவரை திசை மாற வைத்து விட்டது என்று அறிந்து கொள்ள இவரது கடந்த கால பின்னணியையும் நேற்று அவர் கொடுத்த பேட்டியையும் சற்றே ஒப்பிட்டு, தொகுத்து பார்ப்போம்.
✅திரைத்துறையில், ரஜினியின் முதலாளிகள் சார்ந்த "முன்னாள் முதல்" குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபர் ஸ்டாலின். அவர் கட்சி, குடும்பங்கள் ஆகிய இரண்டிலுமே ஓரளவு கருணாநிதியின் இடத்தில் இருப்பவர். முக்கியஸ்தர். அவரது தலைமையிலான திமுக தான் அரசியலில் ஆட்சி பீடத்தில் (2021-26) இருந்தது.
2021ல் ரஜினி அரசியலில் குதிக்கப்போவதாக தீவிர பேச்சுக்கள் நடந்து, அவரும் அதற்கான செயல்பாடுகள் பலவற்றில் ஆர்வம் காட்டி ராகவேந்திரா மேடையில் பலவாறு "சிஸ்டம் கெட்டு போச்சு" என அன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து கூப்பாடு போட்டு முழங்கினார். ஏகப்பட்ட வீரதீரமான வசனங்களை பேசினார். டெபுடிகளை கூட நியமனம் செய்தார்.
மகா பெரிய அளவில் கூட்டமெல்லாம் போட்டு Dec 28, 2021 ல் வீர வசனம் பேசினார். குழப்பவாதி ரஜனி மீண்டும், மீண்டும் தனக்குள் யோசித்து பார்த்திருப்பார் போல இருக்கிறது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். அதை விட, மேடையில் தான் பிரசாரம் செய்யும் போது 40 வருட நண்பர் ஸ்டாலின் மற்றும் அவரது அணியையும் திட்டித் தொலைக்க வேண்டும். இதெல்லாம் எப்படி தனக்கு சாத்தியம். எனவே தனது அரசியல் பிரவேசம் செய்யும் முடிவை re-visit செய்து, இறுதியாக Dec 30, 2021ம் தேதியன்று அவர் அண்ணாத்தே படத்தின் ஷூட்டிங் ல் இருந்தபோது, அங்கிருந்து வெளியேறி நேராக ஹைதராபாத் ல் ஒரு ஆஸ்பத்திரிக்கு போய் படுத்துக் கொண்டு உடல் நிலையை காரணமாக சொல்லி செமயாக பல்டி அடித்தார்.
✅அரசியல் களத்தில் போட்டியாளர்கள் ஆக இருப்பவர்கள் (2021 ல்) அதாவது அரசியல் ரீதியாக தான் எதிர்க்க வேண்டிய நபர்கள் திமுக நண்பர்கள் எனும்போது அவர்களை எதிர்த்து எப்படி அவர் கடுமையாக பேசுவார், அரசியல் செய்வார். ஆரம்பத்தில் டெல்லி தலைமை மற்றும் ஒரு பிரபலமான தமிழக 'குரு' வான ஆலோசகர் போன்றவர்கள் கொடுத்த
தூண்டுதலின் பேரில் தீவிர அரசியலுக்கு தான் வரப்போவதாக சொல்லிக் கொண்டு இருந்தார் ரஜினி. தூபம் போட்டு குளிர் காய்ந்தவர்கள் அர்ஜுன மூர்த்தி, மாரி தாஸ், தமிழருவி மணியன் பாண்டே, கோலாகலாஸ் போன்ற பல பிரபலங்கள். ஆனால் 40 வருட கால நண்பர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி காலத்தில் இருந்தே பழகிய மற்றவர்கள் எல்லாம் திமுக நட்பு வட்டம் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து உறுத்த உறுத்த அவரது அசட்டு துணிச்சல் கரைந்து போய் பயம் வந்தது. நமக்கு அரசியல் பதவியா அல்லது சினிமா வியாபாரம் மூலம் கிடைக்கும் லாபங்களா எதில் அதிக லாபம் என்று அவர் கணக்கு போட்டார். இந்த குழப்பத்தில் சினிமாவே லாபங்களே வென்றது. எனவேதான் தன்னுடைய அரசியல் பிரவேச கன்னி முயற்சியை உடல்நல குறைவு என்று காரணம் காட்டி Abrupt ஆக ABORT செய்து விட்டார். ஆக, தனது 40 வருட கால நண்பருக்காக அரசியல் வாய்ப்புகளை தியாகம் செய்து விட்டார்.
✅கடந்த ஐந்து வருட ஆட்சியில் தமிழகத்தின் உண்மையான நிலைமை எப்படி இருந்தது என்று இரண்டு வயது பெண் குழந்தைகள் முதல் 80 வயது முதிய பெண்கள் வரை நன்கு அறிவார்கள்.
*மது, கஞ்சா, மற்ற போதை பொருட்கள் மளிகை மாதிரி கிடைக்கும் மிகவும் ஆபத்தான நிலை.
*பெண்கள், குழந்தைகள் சார்ந்த கிரிமினல் குற்றங்கள் மலிந்து விட்ட கேடுகெட்ட நிலை.
*அதிக அளவில் கட்ட பஞ்சாயத்துகள் அதனை தொடர்ந்த வன்முறைகள் மற்றும் கொலைகள்.
* இந்து மதம் சார்ந்த பெரும்பான்மையான மக்களுக்கு வேண்டும் என்றே செய்யப்படும் அநீதிகள், தூண்டப்பட்ட தடைகள்.
*அறநிலைய துறையின் அறமற்ற செயல்பாடுகள்.
*மாநிலத்தில் எல்லா திட்டங்களிலும் கமிஷன் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படும் நிலை.
*சக்கரங்கள், கதவுகள், படிக்கட்டுகள் போன்றவை சாலையி லேயே கழன்று ஓடும் நிலையில் அரசு பேருந்துகள்.
*செயின் பறிப்புகள், வழிப்பறி கொள்ளைகள் மற்றும் தொடர் கொலைகள்.
*தற்கொலை களாக மாற்றப்படும் கொலைகள்.
*இன்றளவும் விடை தெரியாத மிகவும் பிரபல அண்ணா பல்கலையின் "யார் அந்த சார்".
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதுபோன்ற எந்த ஒரு கேவலமான நிகழ்வுக்கும் இந்த உச்ச பட்ச நடிகர் தனது வாயை சற்றேனும் திறக்கவில்லை. ஒரு சிறு எதிர்ப்பை கூட அவர் தெரிவிக்கவில்லை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.
✅அவரது முக்கியமான பட முதலாளிகள் சிலர் மது தயாரிப்பு ஆலைகளும் நடத்துபவர்கள். தனது பட ஆடியோ லான்ச் ஒன்றின் போது மது குடிப்பது கெடுதல் என்பது போன்ற மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை அதிகமாக பேசியிருந்தார். தனது ரசிகர்களை குடிக்காதீர்கள் என்று சொல்பவர், மது தயாரிப்பை கைவிடுங்கள் என்று அவரது நண்பர்கள்/ முதலாளிகளிடம் சொல்ல எப்படி தைரியம் வரும். அரசிடம் மது விலக்கை அமல்படுத்த சொல்லி எப்படி கேட்பார். ஒரு சிறு எதிர்ப்பை கூட அவர் தெரிவிக்கவில்லை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.
✅ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டிற்கே சென்று அவரின் அரசியல் தோல்விக்காக துக்கம் விசாரித்ததை வைத்து பார்த்தால் இவர் யாருக்கு வாக்களித்து இருப்பார் என்பது வெட்ட வெளிச்சம். அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களாக இங்கே நடந்த அராஜக நிகழ்வுகளுக்கு அப்ரூவல் தருகிறார் என்று தானே பொருள். ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை ஆளும் அரசிற்கு எதிராக பேச விடாமல் தடுத்து வாய் பூட்டு போட்டு விட்டது.
✅"நான் அரசியலுக்கு வரவில்லையே என்று என்னுடைய ரசிகர்களுக்கு ஆதங்கம் இருக்கும் என்பது எனக்கு புரிகிறது. நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் நான் வெற்றி பெற்று இருப்பேன்" என்று ரஜினி இப்போது கூறுகிறார். சூழ்நிலை சாதகமாகவே இருந்தும் அந்த முயற்சியில் ஏன் இவர் பின்வாங்கினார். அப்படி என்றால் தனக்கு கிடைத்து இருக்கக்கூடிய அரிய ஒரு வாய்ப்பினை நண்பனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டாரா? என்ன ஒரு தியாக மனப்பான்மை. ஆக, 40 வருட கால ஸ்டாலின் உடனான நட்பு அவரை அரசியலில் நுழைய விடாமல் தடுத்து விட்டது.
✅"நடிகர்கள் பின்னால் சென்று காயப்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து. படிக்க வேண்டிய வயதில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும்" என்று தேர்தலுக்கு முன், ஏப்ரல் 8 ம் தேதி ரஜனி பேசினார்.
தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அவர் தன் திருவாய் திறக்காமல் பக்கா அமுக்குணி மன்னனாகவே இருந்தார். ஆனால் இங்கே புதிதாய் முளைத்த தவெக கட்சியின் போக்குகளை பார்த்து விட்டு, திமுக "மேலிடம்" கொடுத்த அன்பான கட்டளையை சிரமேற் கொண்டு ஏற்று, இளைஞர்கள் ஜோசஃப் விஜய் பக்கம் அதிக அளவில் திசை திரும்பி விடக்கூடாது என்ற பயத்தில், தான் மக்கள் மீது அக்கறை காட்டுவது போல நடித்து இந்த அளவு பேசியுள்ளார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள முடிகிறது. "இந்த எங்கள் கருத்து உண்மை தானே கோபால்". ஆம், நீண்ட கால நட்பு மனதில் ஏகமாய் பொங்கி வழிந்தோடிய காரணத்தாலேயே "நடிகர் பின்னால் செல்லாதீர்கள்" என்று தனது 40 வருட நண்பருக்காக இந்த இரு பொருள் பொதிந்த அறிவிப்பை புதிய இளம் வாக்காளர்கள் மத்தியில் உலவ விட்டு மறைமுக பிரசாரம் செய்து இருக்கிறார்.
✅நான் முன்பே எழுதியது போல இவர் உறுப்பினர் அட்டை இல்லாத ஒரு திமுக காரர்; முதுகெலும்பு இல்லாத சுயநலம் மிக்க ஒரு தேசிய வாதி.
தலையை ஒரு பக்கமும் வாலை ஒரு பக்கமும் காட்டும் கலையை நன்கு அறிந்த ஒரு முதிர்ந்த பச்சோந்தி. இந்த உச்ச நடிகரின் மறைமுகமான திட்டம் / உள்நோக்கம் இப்போது வெளிப்பட்டு விட்டது. பூனை வெளியே வந்து விட்டது. எனவே இவரை பற்றிய எனது மதிப்பீட்டில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.
✅இவரை எல்லாம் தலைவா, தலைவா என்ற பெயரில் எப்படித்தான் பெரும்பாலான மக்கள் வெறித்தனமாக கூவி கொண்டாடி கூத்தடித்து வருகிறார்களோ நமக்கு எதுவுமே தெரியவில்லை. மக்கள் என்றைக்கு நடிகனை, நடிகனாக பார்க்க கற்றுக் கொள்ளகிறார்களோ அன்று தான் நமது தேசம் உருப்படும்.
மேலும் சிந்திப்போம்,
மீண்டும் சந்திப்போம்.
Bye for now👋
Bharat Mata ki Jai🙏
Thanks:: Sri k v sridhar