08/11/2023
எனக்கு சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் வரலாறு என் 4ஆம் வகுப்பு புத்தகத்தில் வருகிறது. அது குறித்து நான் மேலும் அறிந்துக் கொள்ள சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் வரலாறு புத்தகம் என் அம்மாவிடம் கேட்டேன்.
சில தோழர்களிடம் புத்தகம் கிடைக்குமா என்று என் அம்மா விசாரித்தார், கிடைக்கவில்லை. சரி என்று திருவல்லிக்கேணி பழைய புத்தக நிலையம் சென்று கேட்டோம். அங்கும் அந்த குறிப்பிட்ட புத்தகம் இல்லை. ஆனால் புத்தகங்களை பார்த்து வாங்காமல் வர முடியாமல் ஐம்பெரும் காப்பிய கதைகள், கடையேழு வள்ளல்கள் கதைகள் புத்தகம் வாங்கி கொண்டு, ஹிக்கிம் பாதம்ஸ் புத்தக நிலையம் சென்றோம். அது போன்ற பெரிய புத்தக கடைக்கு நான் இது தான் முதல் முறை செல்கிறேன். நாங்கள் கொஞ்சம் பார்ப்பதற்குள் கடை மூடும் நேரம் வந்து விட்டது.
சரி என்று அம்மா மட்டும் சில நூல்கள் வாங்கினார். அதற்கு பணம் கட்ட நின்ற போது கடைக்காரர் rs. 535/- என்று ஆங்கிலத்தில் சொல்ல அதை நான் தமிழில் சொல்லி உறுதிபடுத்திக் கொண்டேன். அவர் சிரித்தார். நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது அதான் கேட்டேன் என்றேன். அதற்கு அவர் அதான் சரியா சொல்றியே என்றார். எனக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியும் என்றேன். உடனே அவர் எனக்கு " the warriors" என்று போட்டிருந்த ஒரு batch கொடுத்தார். நானும் என் தங்கையும் நன்றி என்றோம். என் தங்கை எதற்கு இது என்றாள், உன் நன்றிக்காக தான் என்றார். மகிழ்ந்து கிளம்பினோம்.