திசை செய்தி

திசை  செய்தி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திசை செய்தி, Photographer, Door number 1053
Padasalai Street
paluthangari, Chidambaram.

1976ல் பயன்ற சிதம்பரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தவத்திரு ஆறுமுகநாவலர் ம...
27/04/2026

1976ல் பயன்ற சிதம்பரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தவத்திரு ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளியில் 1976ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள தவத்திரு ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளியில் 1976-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனி.மோகன் முன்னிலை வகித்தார். வ.சிவக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்த நிர்வாகி மூதா, வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன், காந்திமன்ற தலைவர் மு.ஞானம், முன்னாள் மாணவர்கள் பு. செந்தமிழ்ச்செல்வன், பொறியாளர். இரா. இராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
விழாவில் முன்னதாக சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களது பள்ளி கால நிகழ்வுகளையும், தற்போதைய நிலை குறித்தும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பள்ளி முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது. மாணவர்கள் பயன்பாட்டிற்கு புதிய கணினி இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவியர்களுக்கா கழப்பறை கட்டுமானத்திற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் ரா. சிற்றம்பலம், ந.கிருஷ்ணன், ந.சீனிவாசன், க.ராஜாராம் ஆகியோர் ஓருங்கிணைத்து நடத்தினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார், நிறைவில் கெளரி ராமநாதன் நன்றி கூறினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில்  சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் த...
27/04/2026

சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் மகாருத்ர யாகமும், வைபவமும் நடைபெறவுள்ளன.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சித்சபையில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, சித்திரை மாத மகாபிஷேகத்தையொட்டி, வரும் மே 6-ஆம் தேதி காலை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்தி
சந்நிதியில் நாந்தி, அனுக்ஜை பூஜையும் நடைபெறவுள்ளன. மே 7-ஆம் தேதி முக்குறுணி விநாயகர் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும், 8-ஆம் தேதி நவக் கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், தேவசபை முன்பு அங்குரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சாரிய வர்ணம், தன பூஜை, மகா தீபாரா தனை நடைபெறவுள்ளன.

மே 9-ஆம் தேதி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனையும், அதன் பிறகு யாகசாலையில் கடஸ்தாபன மும், மகாருத்ர ஜப பாராயணமும் தொடங்கி நடைபெறுகின்றன. பிற்பகல் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூர் ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறுகின்றன.
மாலை வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடை பெற்று சித்சபை முன் உள்ள கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர், துணை செயலர் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் கட்டளை தீட்சிதர் க.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் செய் துள்ளனர்.

05/01/2026

சிதம்பரம் நடராஜர் கோயில்

31/12/2025

இந்த வீடியோ AI

சிதம்பரம் வைகுந்த ஏகாதசி திருவிழாபரமபத வாசல் திறப்புசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தில்லை திர...
31/12/2025

சிதம்பரம் வைகுந்த ஏகாதசி திருவிழா
பரமபத வாசல் திறப்பு

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பாரம்பரிய முறையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கிய வைணவ திருவிழாவில், வைகுந்த லோகத்திற்குச் செல்லும் கமாக கருதப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரமபத வாசல் தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு, விஷேஷ திருமஞ்சனம், வேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவை உள்ளிட்ட பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கோவிந்தரா கோவிந்தா என்ற நாம முழக்கத்தால் ஆன்மீகமயமாக காட்சியளித்தது.
வைகுந்த ஏகாதசி நாளில் பரமபத வாசல் வழியாக தரிசனம் செய்தால், புண்ணிய பலன் கிடைத்து, மோட்சம் பெறும் வழி திறக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதனால் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளானோர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பிற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கோபுரம்
11/12/2025

திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கோபுரம்

இனிய காலை வணக்கம்
11/12/2025

இனிய காலை வணக்கம்

முகநூல் உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்
11/12/2025

முகநூல் உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்

Address

Door Number 1053 Padasalai Street Paluthangari
Chidambaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when திசை செய்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category