சுருதி போட்டோஸ்

சுருதி போட்டோஸ் Being yourself

இனிய காலை வணக்கம்
19/07/2026

இனிய காலை வணக்கம்

சிதம்பரம் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு.சிதம்பரம் தாலுகா புதிய வட்டாட்சியராக வி.சதீஷ்குமார் பொறுப்பேற்றார். இவர் இதற்க...
08/07/2026

சிதம்பரம் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு.
சிதம்பரம் தாலுகா புதிய வட்டாட்சியராக வி.சதீஷ்குமார் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் கலால் பிரிவு அலுவலக மேலாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவேசிதம்பரம் வட்டாட்சியராக பணியாற்றிய ஹரிதாஸ் கடலூர் ஆதிதிராவிடநலத்துறை தனி வட்டாட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார்.புதிய தாசில்தார் சதீஷ்குமாருக்கு அலுவலக
ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

08/07/2026
இனிய காலை வணக்கம் கொடியம்பாளையம்
08/07/2026

இனிய காலை வணக்கம் கொடியம்பாளையம்

இனிய காலை வணக்கம் வாழ்க்கை மாறவில்லை, அதைப் பார்க்கும் என் பார்வை மாறிவிட்டது...
08/07/2026

இனிய காலை வணக்கம்
வாழ்க்கை மாறவில்லை,
அதைப் பார்க்கும்
என் பார்வை மாறிவிட்டது...

இனிய காலை வணக்கம்
08/07/2026

இனிய காலை வணக்கம்

சிதம்பரம் நகரில் “வெல்லும் தமிழ் பெண்கள்” பரப்புரை தொடக்கம்சிதம்பரம் நகரில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற மகளிர் முன்னேற...
23/02/2026

சிதம்பரம் நகரில் “வெல்லும் தமிழ் பெண்கள்” பரப்புரை தொடக்கம்
சிதம்பரம் நகரில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற மகளிர் முன்னேற்ற பரப்புரையை சிதம்பரம் நகரக் கழக செயலாளர் கே.ஆர். செந்தில்குமார் இன்று 14- வார்டில் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பெண்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் தன்னம்பிக்கை வளர்த்து, அரசின் நலத்திட்டங்களை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் எனக் கூறி செந்தில்குமார் உரையாற்றினார்.
பரப்புரை தொடக்க நிகழ்வில் வார்டு மகளிர், உள்ளூர் நிர்வாகிகள், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வீடு தோறும் சென்று பெண்களுக்கு உரிமைகள், கல்வி, சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து விளக்கப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பெண்களின் பாதுகாப்பு, சுயநிறைவு மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இசைத்துறையில் இசைவிழா – துவக்கவிழா நடைபெற்றது.நுண்கலைப்புல முதன்மையர் வரவேற்புரை வழங்கினார். து...
23/02/2026

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இசைத்துறையில் இசைவிழா – துவக்கவிழா நடைபெற்றது.
நுண்கலைப்புல முதன்மையர் வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முனைவர் எஸ். அறிவுடைநம்பி குத்துவிளக்கேற்றி ஆசியுரை வழங்கினார். அப்போது இசையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், இசைத்துறையில் பயிலும் 10 நாதஸ்வர மாணவர்கள் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் முன்னிலையில் இசை நிகழ்த்தியதை பாராட்டினார். அதேபோல், இசை ஆசிரியர் பயிற்சியில் பயிலும் மாணவி
எஸ். ஜீவிதா பல இசைப்போட்டிகளில் பரிசு பெற்றதையும் பாராட்டினார்.
இசைத்துறைத் தலைவர் முனைவர் வி.எல்.வி. சுதர்சன் நன்றியுரை வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக திருப்பாம்புரம் சகோதரர்கள் நாதஸ்வரம், தஞ்சாவூர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் தவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகலில் புல்லாங்குழல், வீணை, வயலின், மிருதங்கம், கடம் உள்ளிட்ட இசைக்கருவி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமன வளாக நேர்காணல் – 58 மாணவர்கள் தேர்வுசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்க...
23/02/2026

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமன வளாக நேர்காணல் – 58 மாணவர்கள் தேர்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகம் சார்பில், ராணிபேட்டை பாரதிதாசனர் கல்விக்குழுமம் மற்றும் காட்டுமன்னார்கோயில் GK கல்விக்குழுமம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்திற்கான வளாக நேர்காணல் கடந்த 17.02.2026 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் S.அறிவுடைநம்பி மற்றும் பதிவாளர் முனைவர் R.சிங்காரவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த நேர்காணலில் சுமார் 240 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டத் தேர்வுகள், திறன் மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றதையடுத்து கல்வியியல், உளவியல், நுண்ணுயிரியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உடற்கல்வியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 58 மாணவர்கள் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் S.அறிவுடைநம்பி மற்றும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் திரு P.ஜெகதீஸ்வரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புல முதல்வர்கள் முனைவர் S.ஸ்ரீராம், முனைவர் V.அம்பேத்கர், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் இயக்குநரகத்தின் இயக்குநர் முனைவர் S.பிரகதீஸ்வரன், துறைத் தலைவர்கள் முனைவர் K.கிருஷ்ணசாமி, முனைவர் L.முல்லைநாதன், முனைவர் N.வெங்கடேசன், இணை இயக்குநர் முனைவர் K.சிவசுப்ரமணி, பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலர்கள் முனைவர் R.நீலகண்டன், முனைவர் P.K.செந்தில்குமார், பயிற்சி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் S.அனிதா சாந்தி மற்றும் முனைவர் S.கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வளாக நேர்காணல் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Address

Paluthangarai 1053 Padasalai Street
Chidambaram
608102

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுருதி போட்டோஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category