09/02/2021
பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுல் ஒன்றாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு என்றனர்.
விளம்பர தொடர்பிற்கு:
Contact us to promote:
Call/Whatsapp: 9042643427
Follow us on:
Youtube:
https://www.youtube.com/channel/UCb2c...
Facebook:
https://www.facebook.com/AVSLifeStyleSV
Music i used in this video:
Music Info: Epic Cinematic Dramatic Adventure Trailer by RomanSenykMusic.
Music Link: https://youtu.be/c-XpTMGPQvI