04/06/2026
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு
பொருள்:
ஒரு கொக்கு (பசியோடு இருந்தாலும்) தன்னைச் சுற்றி பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அவற்றை லட்சியம் செய்யாமல் தனக்குத் தகுதியான பெரிய மீன் (உறுமீன்) வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கும்.
வாழ்க்கையிலும் நம்முடைய இலக்கை அடைய, சரியான தருணம் வரும்வரை பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஆழமான நீதி இது.