28/07/2024
ஒரு பவுன் தங்க செயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது!
ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.
6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்.
யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள்? ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?
மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன? கணக்கு போட்டு பாருங்கள்.
இன்று இலங்கையில் ஒரு பவுன் 24 கரட் 190,000 என்று வைத்துக்கொள்வோம் 8 கிராம் தங்கம் 1 பவுன் ஆகும்.
1 கிராம் தங்கம் 24 கரட் ரூ. 23,750/-
8 கிராம் தங்கம் 24 கரட் ரூ. 190,000 /-
1 கிராம் செம்பு - ரூ.400
1.5 கிராம் செம்பு - ரூ.600
6.5 கிராம் 24 கரட் தங்கம் - 154,375/-
6.5 கிராம் 24 கரட் தங்கம் + 1.5 கிராம் செம்பு =154,375 +600= 154,525 /-
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் = 175,000 - 154,525 /-
லாபம்= 20,475/=
இதுக்குள்ள செய்கூலி, சேதாரம் வேற
இன்றைய நாள் கணக்கின் படி ஒரு பவுன் நகைக்கு அண்ணளவாக 50,000 ரூபா லாபம் வைக்கிறார்கள்.
என்ன தலை சுத்துதா?
ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.