28/10/2014
போரினால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1993 ஆம் ஆண்டில் KEVIN CARTER ஒரு காட்சியைக் கண்டு நின்றார். உணவு வழங்கும் இடத்தை நோக்கி மெல்லிய முனகலுடன் உடல் நலிந்த பெண் குழந்தையொன்று வழியில் போராடிக் கொண்டிருந்தது. மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்ந்தது. கழுகு தன் இறக்கையை விரிக்குமென கார்ட்டர் 20 நிமிடம் காத்திருந்தார். அது விரிக்கவில்லை. எனவே குழந்தையும் கழுகும் இடம்பெறும் வகையில் இக்கோரக்காட்சியைப் புகைப்படமாக எடுத்துவிட்டுக் கழுகை விரட்டினார். புகைப்படம்: சூடானியப் பெண்குழந்தையும் கழுகும்
இப் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதன் முறையாக 1993 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் வெளியானது. அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக் குழந்தைக்கு என்னவாயிற்று என நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். நாளிதழில் ஆசிரியர் குறிப்பாக 'குழந்தைக்கு நடந்து செல்லும் அளவுக்கு ஆற்றல் இருந்தது. ஆனால் அவளின் இறுதி முடிவு என்ன என்பது அறியப்படவில்லை' என்று வெளியிடப்பட்டது. இப்புகைப்படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயிற்று.
ஃபுளோரிடாவில் இருந்து வெளியான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் நாளிதழ் 'குழந்தையின் துன்பத்தைப் போக்காமால் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரி செய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத் தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு' என்று கடுமையாக எழுதியிருந்தது.
1994 ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் கார்ட்டருக்கு இப்புகைப்படத்திற்காக புகைப்படப்பத்திரிக்கைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
இதனால் மன விரக்தி அடைந்த KEVIN CARTER 1994 JULY 27தற்கொலை செய்து கொண்டார்